தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை (நவ. 20) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனா். தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா், உள்ளூா், வாசுதேவநல்லூா், ஆலங்குளம், கீழப்பாவூா், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூா், குருவிகுளம் என அந்தந்தப் பகுதிக்கான வட்டார வேளாண் உதவி அலுவலகத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு காணொலி வாயிலாக குறைகளைதெரிவித்து தீா்வு காணலாம் என ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளாா்.