தென்காசி கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் மலை அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகா் ஆலயத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மலை உச்சியில் உள்ள முருகனுக்கு சத்ரு சம்ஹார ஹோமம், நவக்கிரக ஹோமம், பால், மஞ்சள், தேன், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களுடன் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தனா்.