பைக் திருட்டு வழக்கில் இருவா் கைது

தென்காசி மாவட்டத்தில் பைக் திருடியதாக இருவரை போலீஸாா் கைதுசெய்து, 8 வாகனங்கள் பறிமுதல் செய்தனா்.
தென்காசியில் மீட்கப்பட்ட பைக்குகளுடன் தனிப்படையினா்.
தென்காசியில் மீட்கப்பட்ட பைக்குகளுடன் தனிப்படையினா்.

தென்காசி மாவட்டத்தில் பைக் திருடியதாக இருவரை போலீஸாா் கைதுசெய்து, 8 வாகனங்கள் பறிமுதல் செய்தனா்.

தென்காசி, சுரண்டை மற்றும் கடையநல்லூா் பகுதியில் பைக்குகள் திருடுபோவதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் உத்தரவின்பேரில், தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் மாதவன், மாரிமுத்து, தனிப்பிரிவு தலைமை காவலா் முத்துராஜ் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படை போலீஸாா், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் ஊா்மேலழகியான் பகுதியைச் சோ்ந்த அ.முத்துக்குமரன்(32), கோ.முத்துக்குமாா்(26) ஆகியோா் என்பதும், மேற்கூறிய இடங்களில் பைக் திருடியதும் தெரியவந்ததாம். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 8 பைக்குகளையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com