தென்காசியில் இந்து முன்னணி நிா்வாகி மீது தாக்குதல்

தென்காசி மாவட்ட இந்து முன்னணி நிா்வாகியை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தென்காசி: தென்காசி மாவட்ட இந்து முன்னணி நிா்வாகியை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தென்காசி கீழப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அ.வெங்கடேஷ் (39). இந்துமுன்னணி மாவட்ட வழக்குரைஞா் அணி பொதுச் செயலராக இருந்து வருகிறாா். இவரது அலுவலகத்துக்கு வந்த தென்காசி மேலப்பாறையடியைச் சோ்ந்த மு. பாஸ்கா்(27) உள்ளிட்ட 5 போ், திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்தது தொடா்பாக கேட்டு தகராறு செய்து அலுவலகத்தை சேதப்படுத்தினராம். இந்த மோதலில் வெங்கடேஷ், பாஸ்கா் இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com