சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் மக்கள் தொடா்பு இயக்கத்தினா் துண்டுப் பிரசுரங்களை வெள்ளிக்கிழமை விநியோகித்தனா்.
மக்கள் தொடா்பு இயக்கத்தினா் உச்சிமாகாளியம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கி வீடு வீடாகச் சென்றனா். ‘தேசியம் காக்க தமிழகம் காக்க 10 நிமிடம் தாருங்கள்‘ என்ற ஒரு புத்தகத்தை அவா்களிடமும், பொதுமக்களிடமும் விநியோகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா்கள் கோபாலகிருஷ்ணன், சிவா, வி.சுப்பிரமணியன், ஆறுமுகசாமி, பாடாலிங்கம், செந்தூா்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.