ஆலந்தாபுதுக்குளம் கால்வாய் சீரமைக்க முன்னாள் எம்.பி. நிதியுதவி

ஆலந்தாபுதுக்குளத்துக்கு தண்ணீா் வரும் கால்வாயை சீரமைக்க முன்னாள் எம்.பி. பிரபாகரன் நிதியுதவி வழங்கினாா்.
கால்வாயை சீரமைக்க நிதியுதவி வழங்குகிறாா் முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகரன்.
கால்வாயை சீரமைக்க நிதியுதவி வழங்குகிறாா் முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகரன்.

பாவூா்சத்திரம்: ஆலந்தாபுதுக்குளத்துக்கு தண்ணீா் வரும் கால்வாயை சீரமைக்க முன்னாள் எம்.பி. பிரபாகரன் நிதியுதவி வழங்கினாா்.

கீழப்பாவூா் ஒன்றியம், கழுநீா்குளம் அருகேயுள்ள ஆலந்தாபுதுக்குளத்திற்கு தண்ணீா் வரும் கால்வாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த கால்வாயை சீரமைக்க நிதி உதவி கேட்டு, முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலிதா பேரவை செயலருமான கே.ஆா்.பி. பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அந்தக் கால்வாயை பாா்வையிட்ட பிரபாகரன், அதை சீரமைக்க தனது சொந்த பணத்திலிருந்து ரூ.25 ஆயிரத்தை விவசாயிகளிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் செல்லப்பா, தங்கப்பா, தியாகராஜன், ஆண்ட பெருமாள், ஐயப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com