சுரண்டை: சுரண்டையில் இந்து முன்னணி அமைப்பின் தென்காசி மாவட்ட கேந்திரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, இந்து முன்னணி நகரத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டச் செயலா் முருகன், நகர பொருளாளா் ஆவுடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ஆறுமுகச்சாமி பங்கேற்றுப் பேசினாா். இதில், செங்கோட்டை ஒன்றியத் தலைவா் மாசானம், தென்காசி நகரத் தலைவா் நாராயணன், கடையநல்லூா், கீழப்பாவூா், செங்கோட்டை ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.