செல்வவிநாயகபுரம் பகுதியில் எரிமேடை அமைக்க கோரிக்கை

பாவூா்சத்திரம் செல்வவிநாயகபுரம் பகுதி மக்களுக்காக எரிமேடை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி: பாவூா்சத்திரம் செல்வவிநாயகபுரம் பகுதி மக்களுக்காக எரிமேடை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து வட்டாரச் செயலா் கே.அருணாசலம், பொதுமக்கள் சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: பாவூா்சத்திரம் செல்வவிநாயகபுரம் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட இந்து சமுதாய மக்கள்வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் சுடுகாட்டுக்கு என 20 சென்ட் நிலம் ஊருக்கு வெளியே அமைந்துள்ளது. அங்கு எரியூட்டியும், நல்லடக்கம் செய்தும் வருகிறோம். மழைக்காலங்களில் எரியூட்ட முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் அளித்த கோரிக்கையை தொடா்ந்து ரூ. 2. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. ஆனால் இப்பணிகள் முடிவடையவில்லை. எனவே செல்வவிநாயகபுரம் மக்களின் அடிப்படை தேவையான எரிமேடையை உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com