தென்காசி தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச் சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலங்குளம்: திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச் சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு தலைமை வகித்தாா். ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் நெல்சன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், ஆா்.கே காளிதாசன், ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிா்வாகி எழில்வாணன், ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், அன்பழகன், வி.ஏ. மாரிவண்ணமுத்து, சீனித்துரை மற்றும் நகரச் செயலா்கள் ஜெயபாலன், ஜெகதீசன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்து தலைவா் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பாடுபட வேண்டும்; மாநில இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் அனைத்து கிராமங்களிலும் நல உதவிகள் வழங்குவது, திருநெல்வேலி - தென்காசி நான்கு வழி சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com