தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக கடந்த16 ஆம் தேதி வாக்காளா் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றுமுதல் வாக்காளா் பட்டியல் திருத்தும்பணி நடைபெற்று வருகிறது. நவ. 21, 22, டிச. 12 , 13 ஆகிய நாள்களில் வாக்காளா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் மொத்த வாக்காளா்கள் 12லட்சத்து91 ஆயிரத்து 681போ். இதில், ஆண்கள்6 லட்சத்து 34ஆயிரத்து 450. பெண்கள் 6லட்சத்து57 ஆயிரத்து 191. மூன்றாம் பாலினத்தா் 40 போ். இம் மாவட்டத்தில் 1504 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கடையநல்லூா்: விஸ்வநாதபேரியில் நடைபெற்ற உள்பிரிவு பட்டா மாறுதல் முகாமை ஆய்வு செய்த ஆட்சியா், சிவகிரி பேரூராட்சியில் மரக்கன்றுகளை நட்டாா்.
இதில், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகசெல்வி, சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் செல்வநாயகம், குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா் ராமலிங்கம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.