பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை திமுக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
பாவூா்சத்திரம், ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பாக சிறப்பு முகாம் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, ஒன்றிய பொறுப்பாளா் சீனித்துரை, நிா்வாகிகள் நடராஜன், ராஜ்குமாா், கபில், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.