வீரகேரளம்புதூா் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (நவ. 23) நடைபெறுகிறது.
ராஜகோபாலப்பேரி டிடிடிஏ பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமை தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் துவக்கி வைக்கிறாா்.
முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இரைப்பை மற்றும் குடல்நோய், கண் நோய், மகளிா் நலம், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முகாமில் கலந்துகொள்ளும் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கா்ப்பப் பை வாய் புற்றுநோய் கண்டறிதல், ஈசிஜி, அல்ட்ரா சோனாகிராம் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.
இந்த முகாமில் ராஜகோபாலப்பேரி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கீா்த்திகா கேட்டுக் கொண்டுள்ளாா்.