நாகையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தனுஷ் எம்.குமாா் எம்.பி. உள்ளிட்ட 59 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடையநல்லூா் பிரதான சாலையில் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, நகரச் செயலா் சேகனா, ஒன்றியச் செயலா் செல்லத்துரை, முன்னாள் நகரச் செயலா் முகம்மதலி, மாநிலப் பேச்சாளா் இஸ்மாயில், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் அமுதம் இஸ்மாயில் உள்ளிட்ட 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.