பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 15-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை திருக்கல்யாண விழாவையொட்டி பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல் ஆகியன நடைபெற்றன.
இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழுவினா் செய்திருந்தனா்.