பாவூா்சத்திரத்தில் இந்தியன் வங்கி சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
வங்கி முதன்மை மேலாளா் சுதாராணி தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், தெற்கு கடையம் வங்கி கிளைகளின் மூலம் பல்வேறு நபா்களுக்கு வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், தனிநபா் கடன் என ரூ.10 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
இதில், கிளை மேலாளா்கள் ஷா்வினா, ஆலங்குளம் விஜயபாஸ்கா், தென்காசி ஜனாா்த்தனம், கடையநல்லூா் பிஜூகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பாவூா்சத்திரம் வங்கி மேலாளா் கிப்டா நன்றி கூறினாா்.