சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் புதிய பாா்வை அமைப்பின் சாா்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சேவா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னைத் தொலைத் தொடா்புத் துறை தலைமை அலுவலகத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற பொன்னம்பலம் எழுதியுள்ள யோக குரு சுந்தரா், சுந்தரரின் தனித்தன்மைகள், யோகம் யோகம் சிவயோகம் ஆகிய 3 நூல்களை இலஞ்சி கண்ணப்பநாயனாா் உணவுக் கூடம் நிறுவனா் துரை தம்புராஜ் வெளியிட, அதனை தென்காசி ராமகிருஷ்ண சேவா நிலைய நிறுவனா் மா. அறிவழகன் பெற்றுக்கொண்டாா்.