முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
வீரகேரளம்புதூரில் நாளை குறைதீா் முகாம்
By DIN | Published On : 04th October 2020 01:18 AM | Last Updated : 04th October 2020 01:18 AM | அ+அ அ- |

சுரண்டை: வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை (அக். 5) நடைபெறுகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள்
குறைதீா் முகாம் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவினை திங்கள்கிழமை (அக். 5) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் குறைதீா் முகாமில் அளித்து பயன்பெறலாம் என வட்டாட்சியா் முருகுசெல்வி தெரிவித்துள்ளாா்.