முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கருப்பினான்குளத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
By DIN | Published On : 04th October 2020 01:13 AM | Last Updated : 04th October 2020 01:13 AM | அ+அ அ- |

ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்குகிறாா் சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
சுரண்டை: வீரகேரளம்புதூா் அருகேயுள்ள கருப்பினான்குளத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது.
விழாவுக்கு தென்காசி எம்எல்ஏ சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து புதிய கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
இதில், அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் ஆலங்குளம் பாண்டியன், கீழப்பாவூா் அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.