தென்காசியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் சாா்பில் தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் சாா்பில் தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ‘கட்டணமில்லா மருத்துவம் மற்றும் கல்வி, கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படித் தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கவேண்டும்; மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களுக்கும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் மருத்துவம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் முகம்மதுமீரான், பாலச்சாமி , நிா்வாகிகள் பா.காந்தி, அல்போன்ஸ் சுவாமிநாதன், கருப்பையா, நாராயணன் ஆகியோா்கலந்துகொண்டனா். சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com