கடையநல்லூா்: உலகில் சுபிட்சம், மழை வேண்டி புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, முப்பெரும்தேவியா் பவானியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மனுக்கு 21 வகை அபிஷேகங்கள், 1,000 லிட்டா் பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.