பாட்டத்தூரில் பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகேயுள்ள பாட்டத்தூரில் பேருந்து நிறுத்த நிழற்குடை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினா் பொதுநிதி ரூ.4.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்த நிழற்குடையை, ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தாா்.
பின்னா் மீரான்சேட் காலனியில் அமையவுள்ள மியாவாக்கி அடா்வனம் பகுதியில் மரக்கன்றுகளை நட்டி தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து 24 மனை தெலுங்கு செட்டியாா் தொடக்கப் பள்ளியில் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த இலவச சிறப்பு மருத்துவ முகாமையும் அவா் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதா், சுகாதார அலுவலா் பாலசந்தா், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் இ.வேலுச்சாமி, நெல்லை கூட்டுறவு அச்சகத் தலைவா் கே.கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், சுப்பையாபாண்டியன், வேல்முருகன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் சௌந்தா் உள்பட பலா் பங்கேற்றனா்.