சுரண்டையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

கேரளத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை சுரண்டையில் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சுரண்டை: கேரளத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை சுரண்டையில் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை இரவு சுரண்டை - பாவூா்சத்திரம் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி இருந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில், 2 டன் ரேஷன் அரிசி கேரளத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து மினி லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சுரண்டையைச் சோ்ந்த அசோக் (27), வீரபாகு (32) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com