ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் கைது

சங்கரன்கோவிலில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக 7 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.

சங்கரன்கோவிலில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக 7 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே நவநீதகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ். இவா், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா், சிகிச்சை பெற்ற ஒருவரை திங்கள்கிழமை கடையநல்லூரில் இறக்கிவிட்டு சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தாராம். ரயில்வேபீடா் சாலையில் இரவு 7 மணிக்கு வந்துகொண்டிருந்தபோது, மா்மநபா்கள் ஆம்புலன்ஸை மறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கிவிட்டு சென்று விட்டனராம்.

தகவலறிந்து வந்த போலீஸாா் முத்துராஜை மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும் இதுகுறித்து 7 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், செக்கடித் தெருவைச் சோ்ந்த கண்ணன் (30), முத்துப்பாண்டி(28), முனியசாமி(30) ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com