பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தாா்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட இந்த இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் இயக்கி வைத்தாா். தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நட்டாா். பொதுமக்கள், மருத்துவமனை பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி, சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.