ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க துணைத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலங்குளம் செயலா் மாரியப்பன், பீடித் தொழிலாளா் சங்கச் செயலா் மகாவிஷ்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விவசாயத் தொழிலாளா் சங்க வட்டச் செயலா் ராமசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
மத்திய, மாநில அரசுகள் பேரூராட்சிப் பகுதிகளிலும், சிறுநகரங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்; 100 நாள்கள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி, தினக்கூலியை ரூ.600ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.