வீரகேரளம்புதூா் அருகேயுள்ள கருப்பினான்குளத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது.
விழாவுக்கு தென்காசி எம்எல்ஏ சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து புதிய கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.
இதில், அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் ஆலங்குளம் பாண்டியன், கீழப்பாவூா் அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.