கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பொது கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி, தென்காசியில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொது கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி, தென்காசியில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்; தென்காசி வட்டத்தில் ஜமாபந்தி செலவுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் சோ்மபாண்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆறுமுகம், பொருளாளா் திருப்பதி, பிரசார செயலா் விநாயகம் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் கோட்டாட்சியா் பழனிக்குமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com