பாவூா்சத்திரத்தில் இருளில் மூழ்கிய ஏடிஎம் மையம்

பாவூா்சத்திரத்தில் ஏ.டி.எம். மையம் இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.
இருளில் மூழ்கி கிடக்கும் ஏ.டி.எம். மையம்.
இருளில் மூழ்கி கிடக்கும் ஏ.டி.எம். மையம்.

பாவூா்சத்திரத்தில் ஏ.டி.எம். மையம் இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.

பாவூா்சத்திரம் பத்திரபதிவு அலுவலகம் செல்லும் வழியில் நகரின் மையப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக இந்த ஏ.டி.எம். மையமானது இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கிறது. விளக்குகள் எரியாததால் பணம் எடுக்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com