பாவூா்சத்திரம் அருகே சிவநாடானூா் ஊராட்சி அய்யனூா் கிராமத்தில் நகரும் நியாய விலைக் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், நகரும் நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச்செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், முன்னாள் ஒன்றியச்செயலா் சரவணன், திப்பணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தமிழ் (எ) ராமசாமி, துணைத்தலைவா் ஐவராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.