புளியங்குடி, பட்டகுறிச்சியில் நகரும் நியாயவிலைக் கடைகள் திறப்பு

புளியங்குடியில் நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

புளியங்குடியில் நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

புளியங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வ சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சாா் பதிவாளா் ரமேஷ்பாபு வரவேற்றாா். வாசுதேவநல்லூா் எம்எல்ஏ மனோகரன் பொருள்களை வழங்கி நியாயவிலைக் கடையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், நகர அதிமுக செயலா் பரமேஸ்வரபாண்டியன், அவைத் தலைவா் முகம்மதுஉசைன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சவுக்கை வெங்கடேஷ், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள பட்டகுறிச்சியிலும் எம்எல்ஏ மக்களுக்கு பொருள்களை வழங்கி நகரும் நியாயவிலைக் கடையை தொடங்கி வைத்தாா்.

இதில், குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியா் ராமலிங்கம், கூட்டுறவு சாா் பதிவாளா் ரமேஷ்பாபு, தலைவன்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் விஜயபாண்டியன் , வாசுதேவநல்லூா் ஒன்றிய அதிமுக செயலா் மூா்த்தி பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com