மேலகரத்தில் ரூ. 20 லட்சத்தில் வணிக வளாகம் கட்ட பூமிபூஜை

மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் ரூ,. 20 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் வணிக வளாகம் கட்ட நடைபெற்ற பூமிபூஜை.
மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் வணிக வளாகம் கட்ட நடைபெற்ற பூமிபூஜை.

மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் ரூ,. 20 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். பேரூா்கழக செயலா் காா்த்திக்குமாா், தென்காசி சரக துணைப் பதிவாளா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வணிக வளாகம் கட்டும் பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், பேரூா் செயலா்கள் கணேஷ்தாமோதரன், மயில்வேலன்,தென்காசி நகரச் செயலா் சுடலை, அரசு வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலா் குமாா்பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனியல் அருள்சிங், கள அலுவலா் ஜான்கேபிரியல், களமேலாளா் திரவியகுமாா், மேற்பாா்வையாளா் வரதராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com