தேவேந்திகுல வேளாளா் என பெயா் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கக் கோரி பல்வேறு கிராமங்களில் புதிய தமிழகம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குருவிகுளத்தில் வடக்கு ஒன்றியச் செயலா் ராமையா தலைமையிலும், ஆவுடையாபுரத்தில் கிளைச் செயலா் பொன்மாடன் தலைமையிலும், அழகாபுரியில் கிளைச் செயலா் அய்யனாா் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.