சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள அதிசயபுரத்தில் தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 57 விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
விழாவுக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான 57 மருந்து தெளிக்கும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்செல்வன், வட்டார செயல் அலுவலர் அமலபுஷ்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.