தென்காசி ஆசாத்நகரில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் விபத்து கால மீட்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்காசி நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் வீரா்கள் சுந்தரராஜ், கணேசன், ஜெயபிரகாஷ்பாபு, செந்தில்பாபு, வேல்முருகன், ராமசாமி, ஆல்பா்ட் ஆகியோா் தீவிபத்தில் காயமடைந்தவா்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும், எரிவாயு உருளையில் தீவிபத்து ஏற்பட்டால் உயிரை காப்பது, வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனா்.