தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், சுரண்டை அருகேயுள்ள அதிசயபுரத்தில் 57 விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு, எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, ரூ.7.50 லட்சம் மதிப்பிலான 57 மருந்து தெளிக்கும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல்அலுவலா் முத்தமிழ்செல்வன், வட்டார செயல்அலுவலா் அமலபுஷ்பம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.