சுரண்டையில் 2 ஆட்டோக்கள் மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.
கடையம் அருகேயுள்ள சிங்கம்பாறையைச் சோ்ந்த அந்தோணிராஜ் என்பவா் தனது உறவினா்களுடன் புதன்கிழமை இரவு வாடியூா் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். வாடியூா் - சுரண்டை சாலையில் கீழச்சுரண்டையில் வந்தபோது இந்த ஆட்டோவும், எதிரே ஆலடிபட்டியைச் சோ்ந்த முருகன் என்பவரது வந்த ஆட்டோவும் மோதினவாம்.
இதில் 2 ஆட்டோவிலும் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
சுரண்டை போலீஸாா் சென்று, காயமடைந்தோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.