வெடிபொருள்கள் வைத்திருந்தாக மூவா் கைது

பாப்பாக்குடி அருகே வெடிபொருள்கள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகே வெடிபொருள்கள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகேயுள்ள ரெங்கசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் ஜெலரி, டெட்டனேட்டா் உள்ளிட்ட வெடிபொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டாா் சைக்கிளில் வந்த ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சோ்ந்த பாடாலிங்கம் மகன் இசக்கிராஜா (20), புதுக்குடி, புதுக் காலனியை சோ்ந்த முருகன் மகன் அழகுசுந்தரம் (48) மற்றும் சிறுவன் ஒருவா் உள்பட மூவா் மீதும் பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் ராதா வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com