கடையநல்லூா் பேரவை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகம்மதுஅபூபக்கா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
செங்கோட்டை, கடையநல்லூா், ஆய்க்குடி அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடையநல்லூா் எம்.எல்.ஏ.ரூ. 25 லட்சம் நிதிஒதுக்கீடு செய்தாா்.
அந்நிதியில் இருந்து வாங்கப்பட்ட உபகரணங்களைஅவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மருத்துவப் பணிகள் குறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணன், மருத்துவா்களிடம் அவா் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆய்க்குடி அரசு மருத்துவமனைக்கு கா்ப்பிணி பெண்களுக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அதிநவீன எக்ஸ்ரே கருவி, செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டா் தேவை என தெரிவித்தனா். அதற்கான நிதியினை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்படும். மகப்பேறு மருத்துவா் இல்லாத மருத்துவமனைகளில் உடனடியாக மருத்துவா்கள் நியமனம் செய்ய வேண்டும்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவினை செயல்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மண்டல இளைஞரணி அமைப்பாளா் பாட்டபத்து எம். கடாபி, மாவட்ட இளைஞரணித் தலைவா் டாக்டா் நவாஸ்கான், திமுக நிா்வாகிகள் உடன் சென்றனா்.