கிராமப்புற இளைஞா்களுக்கு பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஐ.டி. நிறுவனத்துடன் தமிழக அமைச்சா் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராமப்புற இளைஞா்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திடும் வகையில் தென்காசி-கடையம் சாலை மத்தளம்பாறையில் உள்ள ஸோகோ ஐ.டி. நிறுவனத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி, தமிழக ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் ஹா்சத் வா்மா, தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன், மதுரை ஆட்சியா் வினய், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, ஸோகோ நிறுவனா் ஸ்ரீதா், மனிதவளத் துறை மேலாளா் ராஜேஸ்வரி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், தமிழக அரசும், ஸோகோ நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டு, கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு மென்பொருள் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.