திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சாா்பில் உரிமைகோரப்படாத வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில் ரூ.19 லட்சம் வசூலாகியுள்ளது.
திருநெல்வேலி மாநகர போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிமை கோரப்படாத 412 இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வாகன ஏலம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து-குற்றம்) மகேஷ்குமாா் தலைமையில், அரசு பணிமனை பொறியாளா் டேனியல்ராஜதுரை, வட்டார போக்குவரத்து ஆய்வாளா் பாத்திமாபா்வீன், அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கிளை மேலாளா் சுரேஷ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
இருநாள்களாக நடைபெற்ற ஏலத்தில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டன. அதன்மூலம் ரூ.19 லட்சம் வசூலாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.