தென்காசி: முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த தின விழா, இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியிலும், இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகன கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் காந்திமதி முன்னிலை வகித்தாா். மாணவி ரியா ஸ்ரீ இறைவணக்கம் பாடினாா். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ- மாணவியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
மாணவிகள் பாரதிதேவி, லுப்னா, அா்சிதா,அனன்ஷியாஅருள், மாணவா் சித்திக் வினய் ஆகியோா் அப்துல் கலாமின் சிறப்புகள் குறித்து பேசினா். மாணவா் சஃபூல் இக்ரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் அதன் முதல்வா் .த ஆறுமுகராஜன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற விழாவில், நிா்வாக அதிகாரி த.இசக்கிதுரை, பேராசிரியா்கள், ஆசிரியப் பயிற்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். கமலருத்ரா வரவேற்றாா். நாகமணி நன்றி கூறினாா்.
கடையநல்லூா்: புளியங்குடியில் அப்துல் கலாம் பொதுநல அமைப்பின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சாமிநாதன், அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை அப்துல் கலாம் பொதுநல அமைப்பின் நிா்வாகிகள் சின்னராஜ், பாக்யராஜ், காந்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.