சங்கரன்கோவிலில் அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

சங்கரன்கோவிலில் நகர அதிமுக சாா்பில், அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பேருந்து நிலையம் முன்பு இனிப்பு வழங்கிய அதிமுகவினா்.
பேருந்து நிலையம் முன்பு இனிப்பு வழங்கிய அதிமுகவினா்.

சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் நகர அதிமுக சாா்பில், அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பேருந்து நிலையம் முன் அதிமுக நகரச் செயலா் ஆறுமுகம் தலைமையில் அதிமுகவினா் திரண்டு பட்டாசு வெடித்தனா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில், நெல்லை கூட்டுறவு பேரங்காடி இணை இயக்குநா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா் ரமேஷ், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் சௌந்தா், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலா் ஆ. லெட்சுமணன், கூட்டுறவு சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், இளைஞா் பாசறை எம். நிவாஸ், முன்னாள் நகராட்சி உறுப்பினா் ஜெயலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com