கடையநல்லூா்: அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி வாசுதேவநல்லூரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் தலைமை வகித்து கட்சி கொடியேற்றினாா். தொடா்ந்து எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன், அதிமுக நிா்வாகிகள் சண்முகையா, வெங்கடேசன், துரைப்பாண்டியன், நீராவி, திவான்மைதீன், முருகையா, ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.