கடையநல்லூா்: கடையநல்லூா் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டம் பொய்கையில் நடைபெற்றது.
திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், இணைச் செயலா் சுமதி கண்ணன், துணைச் செயலா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் அருணகிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் பெரியதுரை, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் கோதா் ஷா, எம்ஜிஆா் மன்ற செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.