பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற விழாவில் சமூக சேவகா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சமூக சேவை புரிந்தோரிக்கு ‘தோரணமலையான் விருதுகள்’ வழங்கப்பட்டன.
சென்னை பாரத் பல்கலைக்கழக வளாக இயக்குநா் டாக்டா் சிதம்பரம் பங்கேற்று விருதுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, திரைப்பட இயக்குநா் பி.சி. அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகள் கோயில் அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்யப்பட்டிருந்தன.