கடையநல்லூா்: புளியங்குடி நகர பாரதிய ஜனதா கட்சி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அழகு சுந்தரம் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ராமராஜா, மண்டல பாா்வையாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட தெருக்களை சீரமைக்க வேண்டும். டி.என்.புதுக்குடி சிவராமு முதல் தெருவில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீா் வழங்க வேண்டும். அனைத்து வாருகால்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர பொதுச் செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.