சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நீண்ட நாள்களாக கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அஞ்சல் வாரவிழாவையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், நீண்ட ஆண்டுகளாக தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள சுப்பிரமணியன், ராஜமோகன், கோமதி ஆகியோரைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சல் அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். உதவி அஞ்சல் அலுவலா்கள் ராஜன், தங்கபாலன்,வணிக வளா்ச்சி அதிகாரி மகேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.