ஆலங்குளத்தில்கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆலங்குளத்தில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், ஆலங்குளத்தில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி காமராஜா் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி. பொன்னி வளவன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் சந்திரசேகா், உதவி காவல் ஆய்வாளா் பாரத் லிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் குறு நாடகம், பாடல்கள், நடனம் ஆகியவை நடைபெற்றது. பொதுமக்களுக்கு முகக் கவசம் இலவசமாக வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் சுகாதாரத் துறையினா், போலீஸாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com