ஆலங்குளம்: ஆலங்குளம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆலங்குளம் வட்டார வள மையத்தில் வைத்து தனிப்பட்ட இயலாமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அமுதா ஜாஸ்மின், அடையாள அட்டையினை வழங்கினாா். இதில், இயன்முறை மருத்துவா் பாலகண்ணன், சிறப்பாசிரியா்கள் அருள்ஞானஜோதி, பிரவீனா, ஜெயஜோதி, முத்துலட்சுமி, சிவவீர நங்கை, அன்பு சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.