சுரண்டை: சுரண்டையில் அமா் சேவா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை அண்ணா சிலை அருகே மினி மாரத்தானை பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் வே.ஜெயபாலன் தொடங்கி வைத்தாா். அங்கு தொடங்கிய ஓட்டம் காமராஜா் வணிக வளாகத்தில் நிறைவு பெற்றது. ஓட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.